Sunday, December 20, 2009

ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்பொழுது.......

டாக்டர். அஷ்ரஃப் அலி ஹக்கிய்யுல் காதிரி
MD DM (Cardiology)
முஹம்மது ஸ‌கரிய்யா ஹக்கிய்யுல் காதிரி
Marine Electronic Engineer


வலீமார்களும், குத்புமார்களும் ஹக்கால் ஹக்குடைய கித்மத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள்.
அவர்களுடைய ஆன்மீக ஆட்சி மறைவுலகத்தைச் சேர்ந்தது. அவர்களை மனிதர்களால் அறியவும் முடியாது. உருவமற்ற இறைவனுக்குக் காலும், கையும், ஏழு வானங்களுக்கு அப்பால் அவன் அமர சிம்மாசனம் என்ற கட்டுமானமும் (அதில் அல்லாஹ் அமரும்பொழுது அல்லாஹ்வுடைய பாரத்தால் குதிரைமீது இடப்பட்ட புதிய சேணம், அதன்மீது குதிரை வீரன் அமரும்பொழுது கிறீச்சிடுவதுபோல் அர்ஷ் கிறீச்சிடுமாம். நஊது பில்லாஹ்) கற்பிக்கும் தைமிய்யாக்களின் கற்பனைக்கு வலீமார்களும் குத்புமார்களும் அப்பாற்பட்டவர்கள்.

ஆன்மீக அரசர்களின் வாழ்க்கையும், நடையுடைகளும், சொல்லும், செயலும், நடவடிக்கைகளும் இந்த தைமிய்யாக்க‌ளின் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பகற் கன‌வுகளுக்கு அப்பாற்பட்டது. தங்களைப்போல் வலீமார்களும் குத்புமார்களும் உடையணிவதாலும், உணவருந்துவதாலும், மனித உருவத்தில் இருப்பதாலும் இவ்வறிவிலிகளால், இவர்களும் நம்மைப்போல் மலத்தை வயிற்றில் சுமந்த மனிதர்கள் என்பதற்குமேல் எண்ணமுடியாது.

இவ்வாறாக ஹக்கு வலீமார்களையும் குத்புமார்களையும் மனிதர்களிடமிருந்து திரையிட்டு மறைத்துள்ளது. ஆனால், அல்லாஹ்வின் ஆதி கற்பனையில் எவரெவ‌ர்களுடைய விதியில் அபூர்வமாகப் புதையல் கிடைத்ததுபோல மகத்தான நன்மையை அல்லாஹ் நாடிவிட்டானோ அவர்களுக்கு, தங்கள் காலத்துக்குரிய நாயகர்களை அறிந்துகொள்ளும் பெரும்பாக்கியத்தை நல்குகிறான். அல்லாஹு அக்பர்.

அப்படிப்பட்ட பாக்கியத்திற்கு உரியவர்தான் மறைந்த எங்களது தகப்பனார் கலீபா, அல்ஹாஜ், அப்துல் கரீம் (ஜமாலி) அவர்கள். எங்களது தகப்பனார், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் குத்பியத்தை உணர்ந்த முதல் மனிதர். இது அவர்களுடைய திறமையினால் அல்ல. இது ஹக்கு அவர்களுக்குக் கொடுத்த பெரும்பாக்கியம்.

எங்களது குடும்பத்தின் சுய நலன் கருதியே எங்க‌ளது தகப்பனார், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களை வருடாவருடம் இந்தியா வந்து எங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த உருக்கமான கடிதத்தை கலீபாவின் மூத்த மகனாகிய, அஷ்ரப் அலியாகிய நான்தான் என் கைப்பட எழுதியவன். இக்கோரிக்கை வாப்பா நாயகம் அவர்களுக்கு மிகமிகக் கடினமாகவே இருந்தது. எனினும், எங்கள் தகப்பனாரின் விடாப்பிடியால்தான் வாப்பா நாயகம் அவர்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். அவ்வாறு ஒப்புக்கொண்டாலும் இந்திய விஜயத்தை நிறைவேற்றுவது ஆரம்பத்தில் வாப்பா நாயகம் அவர்களுக்கு மிகவும் கடினமாகவேயிருந்தது.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் அனைத்துப் பட்டோலைகளும் எங்களது தகப்பனாரால் பாதுகாக்கப்பட்டு பொக்கிஷம்போல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவைகள்தான் எங்கள் சொல்லுக்கு ஆதாரங்கள். வாப்பா நாயகம் அவர்களின் அகமியத்தை முதலில் எங்கள் நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய ஆன்மீக நண்பர்கள் இவர்களுக்கு மட்டும்தான் எங்கள் தகப்பனார் வெளியாக்கியிருந்தனர். பின்னர் அனேகர் வந்தனர். அவர்களில் ஆன்மீக தாகிகளும் இருந்தனர். அப்துல் கரீம் ஓதியவர், படித்தவர், இறை நேசர்களை அறிந்தவர் அவர் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று ஈமான் கொண்டவர்களும் இருந்தனர்.

ஆன்மீக வழியே இன்னதென அறியாது இருந்துவிட்டு இறைவனின் கிருபாகடாட்சம் கொண்டு கற்பூரத்தில் நெருப்புப் பற்றிக் கொள்வதுபோல ஈமான் பெற்றவர்களும் இருந்தனர். வரிக்கு வரி புத்தகங்களை வாசித்து ஆராய்ச்சி செய்து ஒரு வழியாக ஒப்புக்கொண்டு வந்தவர்களும் இருந்தனர். வலீமார்கள் குத்புமார்களென்றால் என்னவோ ஏதோவென்று நினைத்துக்கொண்டு வந்து ஏமாந்து போனவர்களுமுண்டு.

மந்திரத்தால் மாங்காய் விழுமென்று மெஸ்மெரிச வித்தைகளை எதிர்பார்த்து வந்து ஏமாந்தவர்களும் உண்டு. நிமிஷத்திற்கு ஒரு அற்புதம் நடக்குமென்று நினைத்து வந்து ஏமாந்தவர்களும் உண்டு. பீடி மஸ்தான், முட்டை மஸ்தான் மஜ்தூபுகள் போன்று கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று வந்து ஏமாந்தவர்களும் உண்டு. கறுப்பு உடையணிந்து சடை வளர்த்து கண்களை உருட்டுவதையும் விளங்காத பாஷையில் சம்பாஷணை செய்வதையும் காண வந்து ஏமாந்தவர்களும் உண்டு. முழ நீள தலையணியும் கணுக்கால்வரை அங்கியும் வாய் ஓயாத ஸ்தோத்திரங்களையும் பார்க்க வந்தவர்களும் உண்டு. வாய் பேசாது மணிக்கணக்காக கண்மூடிய தியான நிலையை நினத்து வந்தவர்களும் உண்டு. இம்மென்றால் இருநூறும் அம்மென்றால் ஆயிரமுமாக குர்ஆன் ஆயத்துகளும் ஹதீஸ்களும் சண்டமாருதமாக அள்ளி வீசப்படுவதை எதிர்பார்த்து வந்தவர்களும் உண்டு.

குதர்க்க நோக்கோடும், காழ்ப்புணர்வோடும், விஷம புத்தியோடும்,பொறாமைக் கண்கொண்டு நோக்கி, உண்மைக்கு மாறாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் எண்ணத்தோடு வந்த குழப்பவாதிகளும் உண்டு. நன்னம்பிக்கையும், நாணயமும், சித்த சுத்தியும், உள்ளன்பும், உவப்பும், நெருக்கமும் கொண்ட முரீதுகளும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது இகபர பொறுப்புக்களை தங்களது முர்ஷிதிடம் ஒப்படைத்தவர்கள். இம்முரீதுகளின் நலன் நாடி இம்முரீதுகளின் உள்ளங்களை சுத்தம் செய்வது முர்ஷிதின் கடமையாகிறது.

அறுவை சிகிச்சைக்கு அனுமதி கொடுத்துவிட்டு மருத்துவரின் கத்தியை வெறுத்தால் நோய் தீருமா? புடம் போடாமல்தான் தங்க‌த்திலுள்ள அழுக்கை நீக்க முடியுமா? கசப்பு மருந்து கொடுக்கப்படும்பொழுது முரீதுகள் மூன்று வகையாகப் பிரிவர். முதல் வகையினர் தங்க‌ளது ஆன்மீக நன்மை கருதி சிகிச்சையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வர். இரண்டாவது பிரிவினர் வாய் பேசாது விலகிவிடுவர். மூன்றாவது வகையைச் சேர்ந்த அபாக்கியவான்களோ தங்க‌ளது முர்ஷிதுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவிடுவர். இம்மையிலும் மறுமையிலும் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்கள் யார்? பாவமென்னும் நரகலை எப்பொழுதும் தனது ஆன்மாவில் பூசிக்கொண்டிருப்பவன் சுத்தத்தையறியான். குர்பத்தென்னும் சுத்த நீரால் குளித்துவிட்டு மறுபடியும் நரகலை தம் ஆன்மாவில் பூசிக்கொள்ளுபவர்களைவிடப் பேறு கெட்டவர்கள் யார்?

எங்கள் தகப்பனாருடைய உயிர் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் திவ்ய சலாத்திற்கு பதில் சலாம் சொல்லிக்கொண்டே பிரிந்தது. இடையில் வாப்பா நாயகத்திற்கும் எங்கள் தகப்பனாருக்கும் உள்ள விஷயங்களில் தலையிடும் உரிமை, பெற்ற பிள்ளைகளாகிய எங்களுக்கே இருந்ததில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் ஞான பாட்டையில் அடியெடுத்து வைக்காத அபக்குவிகளுக்குப் புரியாது. எந்தக் கட்டத்திலும், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களைக் கொண்டு அனுதினமும் வசீலா தேடும் நியமத்தை ஒரு பொழுதும் எங்கள் தகப்பனார் கைவிட்டதில்லை. இவையெல்லாம் ஒரு முர்ஷிதிடம் ஒரு முரீது எந்த நிலைமையிலும் எவ்வாறு மனம் பிறழாது நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரண‌ங்கள்.

வலீமார்களையும் குத்புமார்களையும் அல்லாஹ்தான் தனது ரஹ்மத்துடைய மடியில் வளர்க்கிறான். ஞான உணவு அளிக்கிறான். மனிதர்கள் வளர்த்துவிடுவதற்கு ஞான மகான்கள் அரசியல்வாதிகளல்லர். இறைவனின் சொந்தக் கொடைகளுக்குமுன் இவ்வுலக ஐஸ்வரியங்கள் நஜீஸைவிடக் கேவலம். ஆனாலும், தங்களை அண்டியவர்கள்மீது உள்ள இரக்கம் காரண‌மாகவே ஞான மகான்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கின்றனர். இவையெல்லாம் அறியாதவர்களுக்குப் புரியாது.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின்மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் கைகூசாமலும், நாகூசாமலும் எழுதுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது இதுதான். இவ்வுலகம் வெறும் இரண்டு நாள். இவ்விரண்டு நாட்களையும் உங்கள் ஆன்மாக்களை அபாயத்தில் ஆக்கிக்கொள்வதில் நீங்கள் ஆனந்தம் கொள்பவர்களாக இருந்தால் நாங்கள் உங்க‌ளைத் தடுக்கப்போவதில்லை. இறைவனை அஞ்சுபவர்களுக்கு ஹதீஸ் குத்ஸியில் இறைவன் செய்துள்ள கீழ்க்கண்ட பிரகடனம் போதும்:

إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب

(நிச்சயமாக அல்லாஹ் சொல்கிறான்: என்னுடைய நேசர்களைப் பகைத்தவர்கள்மீது நிச்சயமாக நான் யுத்தப் பிரகடன‌ம் செய்துவிட்டேன்).
சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் மறைந்த உயிர்ப் பிள்ளை M.Y. நிஜாமுத்தீன் அண்ணன் அவர்கள் கூறுவார்கள்:
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்பொழுது எச்சில் இலை என்னவாகும்?"
ஈமான் ஆட்டங்காணும்பொழுது இதுதான் நடக்கும்.
ஏக இறைவன் நம்மனைவர்களையும் ஈமான் ஆட்டங்காணும் துர்ப்பாக்கியத்திலிருந்து காப்பாற்றுவானாக. ஆமீன்.

ஷபியுல்லாவுக்குச் சாட்டையடி...

ஷபியுல்லாவின் பதில் கடிதம் கண்டேன். பரிதாபமாக இருந்தது. சங்கைமிகு வாப்பா நாயகம்
அவர்களை அல்லாஹ் எனக் கூற மறுத்ததால்தான் சபையிலிருந்து நீக்கப்பட்டதாகக்
கூறுகிறார். இது அப்பட்டமான பொய்ச் செய்தியாகும். சபையிலிருந்து அவர் ஏன் நீக்கப்பட்டார்
என்னும் உண்மைச் செய்தியை இதுவரை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வுண்மையை சபி பாய் வெளியிட விரும்பினால் நாங்கள் வெளியிடத் தயாராக உள்ளோம். ஆனால், மரணப் படுக்கையில் இருக்கும் சபிபாய் இதயம் வெடித்துவிடும் என்னும் கருணையினால் தான் அமைதி காத்து வருகிறேன்.

Ö மேலும், சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை நாங்கள் யாரும் அல்லாஹ்
எனக்கூறவில்லை. சபி பாய் தான் அவ்வாறு கூறி ஷிர்க்கில் இருக்கிறார் எனக் கருதுகிறோம்.

Ö சபையில் பல வருடங்கள் தான் இருந்ததாகக் கூறுகிறாரே, அந்தக் காலகட்டத்தில்
சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை அல்லாஹ் என்றுதான் கூறினாரா? எனத் தெளிவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

Ö திண்டுக்கல் ஜபருல்லா அண்ணனிடம் பேசமுடியவில்லை எனப் பொய்யாக
ஆதங்கப்படுகிறாரே, திண்டுக்கல் ஜபருல்லா அண்ணனுக்கு இவர் செய்த அநியாயம் - துரோகத்தை ஆதாரத்துடன் வெளியிட உள்ளோம். சபி பாய் அவற்றை எதிர்கொள்ளத் தயாரா?

Ö கலீபா. அட்வகேட். பீர் முஹம்மது அவர்கள், சபி பாயிடம் வருத்தப்பட்டதாகக் கூறுகிறார்.
அட்வகேட் அவர்களிடம் இதுவிஷயமாக உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்து விரைவில்
வெளியிடுவோம்.

Ö குரு என்பது யாரோ ஒருவரால் கொடுக்கப்படும் பட்டம் என இவர் கூறுவது சின்னப்பிள்ளைத் தனமாக அல்லவா உள்ளது? B.SC.படித்தவருக்கு அடிப்படை ‘ஞானம் “ கூட இல்லை என அறிந்து வெட்கப்படுகிறோம். என்ன வெட்கக்கேடு?

Ö சபி பாய் செய்த தீமைகள், அநீதிகள், அநியாயங்கள் ஆகியவற்றை எழுதத்தான் போகிறோம்.அவற்றை எதிர்கொள்ள சபி பாய் தன் உடம்பைச் சரி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

Ö சபி பாய் தன்னை ‘துரோகி” என்றும் ஈரோடு ஜமாலை “PLAY BOY” என்றும் ஒப்புக்
கொண்டதற்கு மிக்க நன்றி.

Ö ‘என்னைத் திருத்த வேண்டியதுதானே உங்க வாப்பா நாயகம்?” எனக் கேட்கிறார் சபி பாய்.
திருந்தவே மாட்டேன் என்பவனை - எப்படித் திருத்த முடியும்? கருவாடு மீனாக ஆசைப்படலாமா,சபி பாய்?

Ö குருவின் துஆவினால் செல்வத்தைப் பெற்றவர்கள், அன்னவர்களுக்காக சொத்துக்களை
மட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் தரீகாக்களில் ஜிஹாத் எனச் சொல்லப்படும். சபி பாய்க்கு இதுவும் தெரியாதா?

Ö நாங்கள் கூறுவதை ஃபித்னா என்று சபி பாய் கூறுகிறாரே, எங்களை வம்புக்கு இழுத்து
இல்லாததையும், பொல்லாததையும் எழுதத் தொடங்கியது அவர் தான் என்பதனை மறந்து விட்டீரா? அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவா?

Ö நாங்கள் வறுமையில் பெருமை காண்பவர்கள். ஆனால், சபி பாய் தம்மிடம் இருக்கும் அற்பப் பணத்தை வைத்துக் கொண்டு பெருமை பேசுகிறார். ஆணவத்தோடு பேசுகிறார். அவர் பணம் - அவர் ஆணவம் - அவரையே கொன்று விடும் என்பதை மறந்து விட்டாரா?
Ö கம்பம் - பூகம்பமானதா? என சபி பாய் கொக்கரிக்கின்றாரே? அவர் B.SC. படித்தவர் தானே?
தமிழ் அகராதி என ஒன்று உள்ளது. அதாவது அவருக்குத் தெரியுமா? இனிமேலாவது அதனை
எடுத்துப் பார்த்து கம்பம் என்றால் என்ன பொருள் என்று கூறுவாரா?

Ö நாங்கள் யாரையும் எதையும் இணை வைக்கவில்லை. சபி பாய் தான் இணையில்
சிக்கியுள்ளார். அதிலிருந்து அவர் வெளியேறட்டும்.
M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் தான் உனக்கு வியாபாரம் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை
ஷபியுல்லாவுக்குச் சாட்டையடி...ஒப்புக்கொள்ளும் சபி பாயே... நீ M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் பார்ட்டிகள் உன்னை அழைத்துச் சென்று மண்டி ஆரம்பித்ததாகச் சொல்வதிலிருந்தே, நீ M.Y. நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி கெட்டவனாக
ஆகி விட்டாய் என்பது தெள்ளத்தெளிவாகிறது. இப்படிப்பட்ட நீ எங்கள் ஷைகு நாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவன். உனது வாசகத்தைப் போய்; கலீபா. ஹபீபுல்லா அவர்களிடம் கேட்டதற்கு, அவர் M.Y. நிஜாமுத்தீன் அவர்களுடன் வியாபாரத்தில் சேர்ந்து இருந்ததாகவும்,உன்னைப்போல் நன்றிகெட்ட தனமாக ஓடிவிடவில்லையென்றும் சொன்னார்கள்.
A.P.S.சலாகுத்தீன் குடும்பம், DR. A.P. அப்துல் ஹக் குடும்ப விவாகரத்து விஷயமாக
ஒருதலைபட்சமாக நடந்ததாகக் குறிப்பிடுகிறாய். கலீபா. ஹபீபுல்லா அவர்களும், காஜா நஜ்முத்தீன் ஆகிய இருவரும் A.P.S.சலாகுத்தீன் வீட்டிற்குச் சென்று விஷயங்களைச் சொல்லியவுடன் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் (A.P.S. சலாகுத்தீன், அவர் மனைவி, அவர் மகன் அணீஸ், சலாகுத்தீன் மைத்துனர் V.A.B.M. மாலிக்) ஆகியோர் அனைவரின் ஒப்புதல் பெற்று, அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் Advocate மூலமாக விவாகரத்து நடந்ததை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்.
சங்கைமிகு ஹாமித் மௌலானா அவர்களுக்கு பெண் பிள்ளைகள் கிடையாது. அவ்வாறிருக்க,
சங்கைமிகு ஹாமித் மௌலானா மகளார் கல்யாணத்துக்குப் பணம் கொடுத்ததாக நீ
சொல்லியதிலிருந்து நீ ஒரு பெரும் பொய்யன். எதை வேண்டுமானாலும் உன் இஷ்டத்திற்கு பேசக் கூடியவன் என்று தெரிகிறது. எனவே, நீ சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்,அனைத்துமே பொய்யானவைதாம் என்று இதனை வாசிக்கும் அனைவரும் அறிவர்.
மேலும், எங்கள் குருவைப் பற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க,
கொடுமையான முறையில் நீ உருவகப்படுத்தி எழுதியதைப் பார்க்க, உன் புத்தி எவ்வளவு மோசமானது என்று தெள்ளத் தெளிவாக பிரதிபலிப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
எங்கள் குருநாதர் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களே நல்லவர்கள், நாங்கள் அறிவோம். குருவை அளப்பதற்கு யாருக்கும், குறிப்பாக உனக்கு எந்தத் தகுதியும், அருகதையும் இல்லை என்பதைப் புரிந்துகொள்.

கடைசியாக ஒரு வார்த்தை:
இஸ்லாமிய விரோத காரியங்களில் ஈடுபட்டதால், ஷரீஅத்தின் நியதிப்படி, எங்கள் தரீக்காவிலிருந்து நீக்கப்பட்ட சபி பாய்க்கு, எங்கள் தரீக்காவைப் பற்றியோ, எங்கள் குரு சம்பந்தமாகவோ எழுதவோ,பேசவோ, விமர்சிக்கவோ எந்த உரிமையும், தகுதியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலும், எழுதினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். மேலும்,
எங்கள் குருவை உயிரினும் மேலாக எண்ணக்கூடிய - உயிரையும் கொடுக்கக்கூடிய ஆயிரமாயிரம் உண்மையான பக்தர்களும் உன்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எங்களால் தடுக்க முடியாது.

இப்படிக்கு,
உன் அருகில் இருந்து ‘செயல்படும்”
- A.ஷேக் முஹம்மது.

Tuesday, December 8, 2009

யார் இவர்கள்

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்
பெருமானார் ரசூலே கரீம் ஸல் அலை அவர்களின் திருகுடும்பத்தினரைப்பற்றி அவதூராக எழுதிக் கொண்டிருக்கும் துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் தொஸிபா நிறுவனத்தார்கள் குறிப்பாக இக்பால் அபுபக்கர் இவர்களின் தலைமையில் கோட்டாறு சாதிக் மற்றும் திருச்சி ரப்பானியின் புதல்வர் மற்றும் இக்பாலின் அபிமானிகள்.
இந்தியாவில் ஜமால் ஷபியுல்லா இவர்களை சபையிலிருந்து நீக்கி பல வருடங்கள்கடந்து விட்ட நிலையில் இப்போது இவர்கள் மவுலானாவைப்பற்றி அவதூறாக பேசுவதின் காரணம் என்ன என்பதை விசாரித்த வகையில் துபாயிலிருந்து தொஸிபா கம்பெனி நிறுவாகியான இக்பால் அபுபக்கர் தங்களுக்கு தொலைபேசி செய்து அவதூறுகளை பரப்புவதற்கு பல ஆயிரமங்கள்; கொடுத்ததாகவும் அதனால்தான் நாங்கள் இப்படி நடக்கின்றோம் என்ற உண்மையை கூறி உள்ளார்கள்.
பணத்தினால் அஹ்லேபைத்தினரின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி எழுதக் கூடாத வார்த்தைகளை எழுதி தங்களின் ஈனத்தனமான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நேர்மைமிக்க சகோதரர்களே கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்.
இந்த சபையில் தலைவராக இருந்து எப்படி எல்லாம் மவுலானாவை புகழ்ந்தாரோ அதே நாவு இன்று எப்படி எல்லாம் பேசுகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்.?
இக்பால் அபுபக்கர் செய்த தவறுகளை எல்லோர் மத்தியிலும் வைத்து பகிரங்க படுத்தியதால் அந்த தவறுகளை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு அவுதுறு பேசிக் கொண்டு எழுதிக் கொண்டு வருகிறார்கள்.
பணவசூலுக்காக மவுலானா வருகைதருகிறார்கள் என்று எழுதக் கூடிய நீங்கள் ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள். பணம் நோக்கமாக இருந்திருந்தால் உங்கள் தவறுகளை எல்லோர் மத்தியிலும் சுட்டிக் காட்டி இருக்க மாட்டார்கள். உங்களிடமிருந்து கோடி கோடியாக வருகிறது என்றால் உங்களை யாரும் பகைத்துக் கொள்ள முடியுமா?
படித்தவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் தலைவன் தொண்டன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரியான அன்பை மவுலானா வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.
உங்களின் சுயகௌரவத்திற்காக வேண்டி இன்று அவதூறு எழுதி வருகிறார்கள்.
ஈடியே நிறுவனத்திலிருந்து இக்பால் மாறினாரே இந்த நிறுவனத்திற்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்திருக்கிறார் என்பது அவர் மனசாட்சிக்கு தெரியும்.
ஆதை விரைவில் சலாவுதீன் காக்கா அவர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளேன். அவர்கள் அனுமதி தந்தால் இந்த பிளாக்கில் வெளியிடுவேன்.
இன்னும் தற்போது இயங்கி வரும் டொஸிபா நிறுவனத்தை அபுதாபி ஸ்பான்ஸரிடமிருந்து அபகரிக்க நடந்துக் கொண்டிருக்கும் சதி லீலைகளைப் பற்றிய செய்திகளையும் வெளியிடுவேன்.
ஆநியாயமாக உழைப்பைக் கொடுத்து வேலைப்பார்த்து வந்த சகோதரர்களை சபைக்கு செல்கிறார்கள் என்றக் காரணத்திற்காக வேலையிலிருந்து நீக்கி அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

உங்கள் சகோதரன்
வழுத்தூரான்

Monday, December 7, 2009

முஸ்லீம் முரசில் மறுப்பு கடிதம்

அன்பிற்குரிய சகோதரர்களே…

கடந்த நவம்பர் மாத “முஸ்லிம் முரசு” இதழில், ஈரோட்டைச் சேர்ந்த கு.ஜமால் முஹம்மத் என்பவர், சங்கைக்குரிய மவ்லானா அவர்களைப் பற்றித் தவறான செய்தியை எழுதி வெளியிடச் செய்தார். அதன் பின், தரீக்காவின் கலீஃபாக்கள் சிலர், அப்பத்திரிகையின் அலுவலகத்திற்குச் சென்று, உண்மை நிலைமையை எடுத்துக் கூறி, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தலைமை கலீஃபா ஹபீபுல்லாஹ் அவர்களின் கடிதத்தை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உண்மையை உணர்ந்து கொண்ட ஆசிரியர், டிசம்பர் மாத இதழில், அக்கடிதத்தை வெளியிட்டார்.

அவ்விரு கடிதங்களையும் இங்கு தங்களின் பார்வைக்காக வைத்துள்ளோம்…

இனியாவது, ஜமால், சபியுல்லா மற்றும் இம்தியாஸ் போன்றவர்கள், உண்மையைப் பேச முயற்சிப்பார்கள் என நம்புகிறோம்….

வஸ்ஸலாம்.

Thursday, December 3, 2009

காயல் ரசிகன்

காயல்பட்டினம் அபூபக்கர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…….)

தங்களின் கடிதம் பார்த்தேன்; ரசித்தேன்; ஒன்றே ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் பொய்யாகவும் திரித்துக் கூறப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

தாங்கள் தற்சமயம் சபை நிகழ்சிகளில் இருந்து விலகிக் கொண்டதாகக் கூறியது மட்டும் உண்மையான மற்றும் மகிழ்ச்சியான செய்தி….

மற்றவற்றிற்கு என்னுடைய பதில் இதோ:

* தாங்கள் முதலில் இஸ்லாமியராக இருப்பதற்கு முன், நல்ல மனிதராக இருக்க வேண்டும். எந்த மதத்தினரையும் நோவினை செய்யாதவராகவும், ஒரு மதத்தைப் பற்றி யாரேனும் தவறாகப் பேசும் பட்சத்தில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பவராகவும் இருக்க வேண்டும்… தாங்கள் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே…?
* தங்களுக்குத் தெரியாமலேயே, தங்களையே நிறுவனத்திலிருந்து துரத்துவதற்கான முயற்சிகளெல்லாம் நடைபெற்றவை அதிகமாகத் தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
* யார் யாரெல்லாம் கம்பெனிக்கு எதிராகச் செயல்பட்டார்கள், யார் யாரையெல்லாம் என்னென்ன காரணத்திற்காக கம்பெனியிலிருந்து நீக்கினீர்கள் என்பதனை அனைவரும் அறிவர்…
* ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது சம்பந்தமாக பிரச்சனைக்குள்ளான ஒருவரை, 100 க்கும் மேற்பட்ட முறை அவர் மீது புகார்கள் வந்தும், மிகப் பல முறை அடி தடியில் ஈடுபட்ட அவரை, கிட்டத்தட்ட 3 வருடங்கள் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றியதன் பின்னணி என்ன?
* வேலைக்கு ஆள் எடுக்கச் சென்ற ஒருவர், விசாவிற்காக பணம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வெளிப்படையாகப் புகார் கூறப்பட்டும், அதனை தங்களுக்கு நெருங்கியவர்களே அனைவரிடமும் கூறிய போதும், அவர் இன்றளவும் அதே நிறுவனத்தில் நிலைப்பதன் அர்த்தம் என்ன?
* அதே நிறுவனத்தில் அதே பதவியில் அதே ஊழியர்களுடன் பணியாற்றிய தாங்கள், ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் மிக நன்றாகவே அறிந்திருந்த தாங்கள், 4 வருட காலமாக அமைதியாக இருந்துவிட்டு, இப்பொழுது கூக்குரலிடுவதன் மர்மம் என்ன?
* மிக அதிகமான் தகுதிகள் இருந்தும் மிக நன்றாகவே படித்திருந்தும், கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கும் ஒரு சில பணிகள், ஹெல்ப்பராக 3 மாதங்கள் மட்டுமே வேலை பார்த்தவுடன், 5 வருடமாகியும் இன்றளவும் அதனைப் பற்றிய முழு அனுபவமில்லாதவருக்கு, மிக எளிதாகக் கிடைப்பது எவ்வாறு?



* “ சபைக்குச் சென்றால் தங்களைப் போல் என்னையும் டெர்மினேட் செய்து விடுவார்கள்” என எமது சகோதரரிடம் வழுத்தூரைச் சேர்ந்த ஒரு ஊழியர் கூறியிருக்கிறார். இதுதான் தாங்கள் கம்பெனி நடத்துவதன் வழிமுறையா? எப்படி சார், எதுவுமே தெரியாததுபோல் நடிகின்றீர்…!



* எமது சகோதரரை, விடுமுறை நாளான வெள்ளிகிழமை அன்று இரவு 11 மணிக்கு போன் போட்டு, மறுநாள் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்து, சட்டத்திற்கு எதிராக, கடிதம் ஏதும் அளிக்காமல், எந்த முன்னறிவிப்பும் செய்யாமல், ஒரு மாத நோட்டிஸ் கூட கொடுக்காமல், டெர்மினேட் செய்தது ஏனோ?



* அவ்வளவு அவசர அவசரமாக டெர்மினாட் செய்யுமளவுக்கு, அவர் என்ன கிரிமினல் குற்றமா செய்தார்? முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றித் தவறாக ஒருவன் பேசிய பொழுது, தங்களுக்கு வராத கோபம், தங்களைப் தவறைச் சுட்டிக் காட்டிப் பேசிய பொழுது மட்டும் வந்தது ஏனோ?




….. தொடரும்……

Sunday, November 29, 2009

அல்லாஹ்வா? அல்லாமாவா?

அன்பிற்குரிய சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…..)

அல்லாஹ்வுக்காகவும் ரசூலுக்காகவும் அவர்கள்தம் குடும்பத்தினருக்காகவும் எந்த தியாகத்தை வேண்டுமானலும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒருவருக்காக – அவர்தம் அளிக்கும் பணத்திற்காக ஈமானையே இழந்த ஒரு கூட்டம் துபையிலும் தஞ்சை மாவட்டத்திலும் இருக்கிறது.

அந்தக் கூட்டத்திலிருந்து வெளிவந்த பலர் – அவர்களின் போலியான ஈமானை எதிர்த்த பலர், அவர்களின் குண நலன்களைப் பற்றி என்னிடம் கூறியவற்றை அப்படியே இங்கு தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

இவை கதையல்ல….நிஜம்! இவற்றிற்கு பலமான ஆதாரங்களும் இருக்கின்றன. இப்படி ஈமானை இழந்தவர்கள், தங்களுக்கென்று ஒரு நிறுவனமும் தொடங்கி, அதில் கொடிய வஹ்ஹாபிகளையும் – முஹம்மத் (ஸல்) அவர்களைத் “தீவிரவாதி” எனக் கூறுபவனையும் பணியமர்த்தி ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.

சகோதரர்கள் அனைவரும் இவர்கள் விஷயத்தில் மிகக் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இக்கட்டுரையைப் பற்றிய தங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.



------------------------------------

1. முஹம்மத் (ஸல்) அவர்களைத் “தீவிரவாதிகளின் தலைவர்” எனக் கூறியவனை இன்றளவும் வேலையில் அமர்த்தி அழகுபார்ப்பது.
2. மனதில் கொஞ்சம் கூட ஈமானில்லாமல் அடிக்கடி “நாரே தக்பீர்” என உரக்கக் கத்துவது.
3. வலிமார்களின் தலைவரான முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை “வணிகம் செய்ய வந்தவர்கள்” எனக் கூறுவது.
4. ஸய்யிதுமார்களை “அண்ணன், தம்பி” என முறை கூறி அழைப்பது.
5. ஸய்யிதுமார்களுக்கு முதல் மரியாதை செய்வதை மனதளவில் ஏற்றுக் கொள்ள மறுப்பது.
6. அஹ்லுல்பைத்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களை எதிர்த்தால், எதிர்த்தவரை உடனடியாகப் பணி நீக்கம் செய்வது.
7. வஹ்ஹாபிகளையும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் தனது வீட்டில் வைத்தே வளர்ப்பது.
8. சரியாக தப்ரூக் வழங்கப்படும் நேரத்திற்கு மஜ்லிசிற்கு வருவது.
9. GM என்பதற்கு “ஜெனரல் முஆவியா” எனப் புது விளக்கம் கொடுப்பது.
10. முஹம்மத் (ஸல்) அவர்களின் அன்புத் துணைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை “வாய்த் துடுக்கானவர்” எனக் கூறி மகிழ்வது.
11. சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாத தம்பியை, அவருடைய அண்ணன் “பைஅத்” பெற சங்கைக்குரிய ஷைகிடம் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அழைத்து வருவது.
12. “தப்ரூக் உணவு தயாராகிவிட்டதா?” என எஸ்.எம்.எஸ் அனுப்பி வினவிய பிறகு, மஜ்லிசிற்கு வருவது.
13. வாட்ச்மேன் வேலைக்குக் கூடத் தகுதியில்லாத ஒருவரை அலுவலகத்தின் உயர்ந்த, முக்கியமான பணியில் அமர்த்துவது.
14. தனக்கு நெருங்கிய நண்பரையே, அவருக்கும் தெரியாமல் ஷைகிடம் புகார் கூற ஆள் ஏற்பாடு செய்வது.
15. “குறிப்பிட்ட காலத்திற்குமேல், பாடம் சொல்லித் தந்த குருவைப் பின்பற்றத் தேவையில்லை” எனக் கூறுவது.
16. தனக்குப் பிடிக்கவில்லையென்றால், மவ்லித் மற்றும் திக்ரு நடைபெறும் மஜ்லிஸ்களுக்குக் கூடச் செல்லக்கூடாது என தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை மிரட்டுவது.
17. தனது ஷைகிடமே நேருக்கு நேர் தர்க்கம் செய்வது.
18. இஸ்லாத்தின் சங்கைக்குரிய கலீஃபாக்களை தரம் தாழ்த்திப் பேசுவது.
19. கீழக்கரை மஹானந்த பாபா (ரலி) அவர்களின் அற்புதங்களைக் குறைகூறிப் பேசுவது.
20. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப் பற்றித் தவறாகப் பேசியவருக்கு, மறுமையில் சுவனம் உண்டு என உறுதியிட்டுக் கூறுவது.
21. ஸய்யித் வம்சத்தைச் சேர்ந்தோரை, தனது சொந்த வீட்டு வேலைக்கும் பயன்படுத்திக் கொள்வது.
22. தனது நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளரை, தனது வீட்டு வேலையைச் செய்ய அழைத்துக் கொள்வது.
23. “400 வருடங்களுக்கு முன்பு வரை தானும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன் தான்” எனப் பிதற்றிக் கொள்வது.
24. தன்னிடம் உள்ள குறைகளைக் களைய முற்படாமல், தன்னுடைய எதிரிகளாக நினைப்பவர்களைத் தேடித் தேடி ஒழிப்பது.
25. முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவோருக்கு அதிகமான ஊதிய உயர்வு வழங்குவது.
26. தன்னைப் பற்றிப் புகழ்வதற்கென்றே, தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்வது.
27. பழிவாங்கும் பொறுப்பை சகோதரரிடம் ஒப்படைத்து விடுவது.
28. புனிதமான இடங்களில் தங்கியிருக்கும் போது, மனைவியுடன் உடலுறவு கொள்வது.
29. ஏனைய முரீதீன்களைப் பற்றி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து கிண்டல் அடிப்பது.
30. தனக்காக பல ஆண்டுகாலம் உழைத்தவர்களை, ஒரு நொடியில் தூக்கியெறிவது.
31. நிறுவனத்திலிருந்து வெளியேற விரும்புகிறவர்களை, பல மாதங்கள் அலைக்கழித்து சொந்த நாட்டுக்கு அனுப்புவது.
32. தன்னுடைய ஷைகு, தான் பணிபுரியும் நாட்டிற்கு வரும்போது, அங்கிருந்து புறப்பட்டு, தாய் நாட்டிற்குச் சென்று விடுவது.
33. குடிகாரர்களை அதிகமாகப் பணியில் அமர்த்துவது மற்றும் அவர்களுடன் சிநேகத்தை வளர்த்துக் கொள்வது.
34. தன்னுடைய ஊராரை, நபியின் குடும்பத்தாரைப் பற்றித் தவறாகப் பேச ஏவி விடுவது.
35. ஒரு ஷைகிடம் பைஅத் பெற்ற பிறகும், அவர்களைவிட ஒரு சில புத்தகங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது.
36. “நான்” எனும் அகந்தையை அழிக்கும் ஏகத்துவக் கொள்கையை ஏற்று 20 வருடங்களுக்கு மேலாகியும், கோபம், தற்பெருமை மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை விட்டொழிக்காமல் இருப்பது.
37. ஸய்யிதுமார்களிடமே தரஜாவில் போட்டி போடுவது.
38. ஒரு இடத்தில் இருந்து விலகிய பிறகும், அந்த இடத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக முனாஃபிக்கீன்களை அனுப்புவது.
39. அஹ்லுல்பைத்துகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டால், எந்தக் காரணமும் கூறாமல், இரவோடு இரவாக உடனடிப் பணிநீக்கம் செய்வது.
40. ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை, சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தடுத்து விடுவது.
41. பெரியோர்களைப் போற்றக்கூடிய மஜ்லிசுகளில் தனக்கு மிகுந்த மரியாதையை எதிர்பார்ப்பது.
42. “சுன்னத் வல் ஜமாஅத்” எனக் கூறிக் கொண்டு, கொடிய வஹ்ஹாபிகளை ஆதரிப்பது மற்றும் அவர்களை நபிகளாருக்கு எதிரான செயல்களில் ஈடுபட அனுமதிப்பது.
43. கொடிய வஹ்ஹாபிகளுடன் பண்புடனும் பாசத்துடனும் ஆதரவுடனும் பழகுவது.
44. மவ்லித் மற்றும் ஏனைய மஜ்லிசுகளில் கலந்து கொள்வதைத் தடுக்கும் வண்ணம், அந்த மஜ்லிசுகளுக்குச் செல்வோரை பணியிட மாற்றம் செய்வது.
45. நபிகளாரின் குடும்பத்தாருக்கு எதிராக நோட்டீஸ் அச்சடித்து விநியோகிப்பது.
46. வேலை வாய்ப்பிற்காகவும் பணத்திற்காகவும் ஈமானை விலை பேசுவது மற்றும் ஈமானைத் தூக்கி எறிவது.
47. மற்றோரைவிட நபிகளாரின் குடும்பத்தினரை துச்சமாக நினைப்பது.
48. தனது ஷைகு, தன்னுடைய தோள் மீது கைபோட்டுக் கொண்டு நடந்து செல்வது போல் கனவு கண்டதாக மரியாதையில்லாமல் பேசுவது.
49. நபிகளாரின் குடும்பத்தினருக்கு எதிராகவும் ஷைகிற்கு எதிராகவும் இணையதளம் துவங்கி பிரசாரம் செய்வது.
50. “தூய சுன்னத் வல் ஜமாஅத்தினர்” எனக் கூறிக் கொண்டு, கொடிய வஹ்ஹாபியின் இணையதளத்தில் கட்டுரைகள் எழுதுவது மற்றும் உறவு கொண்டாடுவது.
51. “ஏக இறையின் பேரருளாலும் ஷைகினுடைய துஆ பரக்கத்தாலும்தான் குழந்தை வரம் கிடைத்தது” என உருக்கமாகப் பேசிவிட்டு, ஓரிரு வருடங்களில் அதனை அப்படியே மாற்றிப் பேசுவது.
52. நண்பர்களுடைய குடும்பத்தினருக்குள் சண்டை சச்சரவுகளைத் துவங்கி வைப்பது.
53. வயது வித்தியாசமின்றி பாலினச் சேர்க்கையைப் பற்றிப் பரிமாறிக் கொள்வது.
54. தனக்குப் பிடித்தவர்களுக்கு, அதிகமான நாள் விடுமுறை கொடுத்து ஊருக்கு அனுப்புவது; பிடிக்காதவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்வது.
55. குவாலிட்டி கண்ட்ரோல் பொறியாளராக குவாலிட்டி இல்லாத நபரை நியமிப்பது.
56. தர்மம் செய்த பணத்தைப் பற்றிப் பேசி தன்மானத்தை இழப்பது.
57. தனக்குத் தானே அடைமொழியிட்டு அழைத்துக் கொள்வது.
58. தன்னுடைய ஷைகிற்கு உணவு பறிமாறும் போது, பழைய / அழுகிய நிலையில் உள்ளவற்றைப் பயன்படுத்துவது.
59. ஷைகிற்கும் அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் அதிகமான மரியாதை செய்வோரை, எதிரியாக நினைப்பது.
60. படித்தவரை கீழும், படிக்காதவரை மேலும் வைத்து அழகு பார்ப்பது.
61. கொடிய வஹ்ஹாபிகளை பணியமர்த்தி, அவர்களை ஊக்குவித்துவிட்டு, அப்படிப்பட்டவர்கள் இருப்பதே தெரியாது என நடிப்பது.
62. நபிகளாரின் குடும்பத்திலுள்ளோரைத் தவிர, ஏனைய ஸஹாபாக்களை ஏளனமாகப் பார்ப்பது – பேசுவது.
63. ஷைகிடம் பைஅத் பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே, தாங்கள் ஞானத்தை அறிந்து கொண்டதாகக் கொக்கரிப்பது.
64. அல்லாஹ்வை விட, தனக்கு வேலைவாய்ப்பு தந்தவரின் மேல் அதிகமான ஈமானை வளர்த்துக் கொள்வது.
65. தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிவோரை தன்னுடைய வீட்டுக் கழிவறை மற்றும் சமையலறையைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வது.
66. முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி ஒருவன் தவறாகப் பேசியபோது அமைதியாக இருந்துவிட்டு, சாதாரண மனிதர் ஒருவரை – அவர் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது, அதனைப் பற்றி போன் போட்டு விளக்கம் கேட்பது.
67. ஊரில் வஹ்ஹாபிகளுடன் ஒரு பிரச்சனை வரும்போது, அதற்குப் பயந்து, பக்கத்து ஊருக்கு முனாஃபிக்கான நண்பருடன் உணவருந்தச் சென்று விடுவது.
68. வார்த்தைக்கு வார்த்தை “யா முஹிய்யுத்தீன்” எனக் கூறிவிட்டு, அவர்கள்தம் பாரம்பரியத்தில் வந்த பெரியோரிடம் பைஅத்தும் பெற்றுவிட்டு, பின்பு பணத்திற்காக ஈமானை இழப்பது.
69. சங்கைக்குரிய ஷைகினுடைய வருகையை, குரோதத்தினால், மற்றவருக்கு அறிவிக்காமல் இருப்பது.
70. நல்ல காரியங்களுக்காக வசூல் செய்யப்படும் பணத்தில் மோசடி செய்துவிட்டு, பொய்க் கணக்குக் காட்டுவது.
71. சக முரீதீன்களைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டு அதற்காக நன்றாக ஸய்யிதுமார்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது.
72. “வலிமார்கள் எப்பொழுதாவதுதான் இறையுடன் இரண்டறக் கலந்த நிலையில் இருப்பார்கள்” என ஏகத்துவத்திற்குப் புது விளக்கம் அளிப்பது.

73. அலுவலக வேலையை விட்டு விலகுவது போல், பைஅத் பெற்ற ஷைகிடம், பைஅத்திலிருந்து நீங்கிக் கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்து, தான் ஒரு அறிவிலி என நிரூபிப்பது.
74. அலுவலகத்தில் அமர்ந்து, அலுவலக வேலைகளைத் தவிர மற்ற “அனைத்தையும்” பார்ப்பது.
75. வேண்டிய அனைத்தையும், எல்லாம் வல்ல ஏக இறையின் பேரருளாலும் ஷைகினுடைய துஆ பரக்கத்தாலும் பெற்றுக் கொண்டுவிட்டு, பைஅத் பெற்று 25 வருடங்களுக்கு மேல் ஆகியும் ஒரு பலனுமில்லை என நாகூசாமல் கூறுவது.

ஷஃபியுல்லாஹ்வின் புலம்பலுக்கு பதிலடி...

ஷஃபியுல்லாஹ் சொல்வதெல்லாம் பொய்யைத் தவிர பொய்!!!
வேறொன்றும் இல்லை!!

ஷஃபியுல்லாஹ் என்பவர் திண்டுக்கலை சேர்ந்தவர்.. காலமெல்லாம் வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தாய் வழி தந்தை வழி உற‌வினர்களின் ஆதரவில் B.Sc., வரை படித்தார். படித்து வேலை கிடைக்காமல் அலைந்த போது, உறவினர்களில் MDCC வங்கியில் பணிபுரிந்த அமானுல்லா என்பவரின் சிபாரிசில் ரேஷன் கடை ஒன்றில் சேர்த்து விடப்பட்டார். திண்டுக்கலுக்கு அருகே உள்ள சீலப்பாடி என்ற ஊரில் ரேஷன் கடையில் வேலை பார்த்த போது, பொது மக்க‌ளுக்கு சேர வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய், சீனி போன்றவற்றை கொள்ளையடித்தார். பல தடவை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டதும் உண்டு. இன்றும் இவர் மீது வ்ழக்கு உண்டு. இப்படி இருக்கும் காலத்தில் சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் திண்டுக்கல் பேகம்பூருக்கு விஜயம் செய்தார்கள். அவர்களிடம் புலவர் குடும்பப் பெரியவர்கள் எம் உறவினர்கள் எல்லோரும் வறுமையில் வாடுகிறார்கள். எனவே, தாங்கள் எங்கள் புலவர்கள் வசிக்கும் பூர்வீக பழைய வீட்டுக்கு வர வேண்டும், நபி பேரராகிய தங்களின் திருப்பாதம் பட்டால், வறுமை விலகும். அது மட்டுமல்ல, ஜவ்வாதுப் புலவரின் பேச்சை மீறியதால், அவர்க்ளின் சாபமும் எங்கள் குடும்பத்தார் மீது உள்ளதாக பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறோம். எனவே, சாபத்தை மாற்றும் வல்லமை வலிமார்களின் துஆவுக்கே உண்டு, எனவே, வந்து துஆச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அது போல, வாப்பா நாயகம் அவர்கள் அந்த வீட்டிற்கு வருகை தந்தார்கள். அங்கு தான் சஃபியுல்லாவின் வீடும் (ஒரு ரூம்) இருந்தது.

பார்த்து மிகவும் கவலைப்பட்டு, இரக்கம் கொண்டு எல்லோரது நல்வாழ்வுக்கும் துஆச் செய்தார்கள். அதற்குப் பின் மிகப்பெரும் மாற்றம் அந்த குடும்பத்தில் ஏற்பட்டது. எல்லோரும் வியாபாரிகளாக மாறி சென்னை பெரியமேட்டில் பெரிய வியாபாரிகளே அஞ்சும் அளவுக்கு முன்னேறினார்கள். பேகம்பூர் மக்கள், வாப்பா நாயகம் துஆச் செய்த காரணத்தால், இப்படி பரக்கத்தாக மாறிவிட்டார்களே என்று பேசிக்கொள்வார்கள்.இது இப்படியிருக்க, சஃபியுல்லாஹ் இருவருடன் சேர்ந்து வியாபாரம் தொடங்கினார். தொடங்கி வளரும்போதே ஒரு பார்ட்னரை வெட்டி விட்டார். சென்னை சென்று M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் மண்டியில், அவர்களது தனி ஆதரவுடன் வைத்து வியாபாரம் பழக்கப்பட்டார். பின்னர் அவருக்கே துரோகம் செய்து, M.A. காதிர் அன் கோ என்ற பெயரில் M.Y. நிஜாமுத்தீன் அவர்களின் பார்ட்டிகளையெல்லாம் இழுத்துக் கொண்டு போய், அவரது வியாபாரத்தை வீழ்த்தினார். இவரது மண்டியை நம்பி தோல் அனுப்பிய உறவினர்கள் மற்றும் பேகம்பூர் வியாபாரிகளைக் கணக்கில் மோசடி செய்து அவர்களின் கமிஷன் பனத்தில் தான் மட்டும் வளர்ந்தார். M.A. காதிர் அன் கோ - வை யாரும் அசைக்க முடியாது என்று மார்தட்டி சொன்னவர், பார்ட்னர்களிடம் நீதியாக நடக்காததால், சில வருடங்களிலேயே அது சிதைந்து போனது. துண்டுத் தோலை விற்று ஏழைக் குமர்களுக்கு உதவி செய்வதாக கூறி கொஞ்சம் கொடுத்து விட்டு, தானே அதைச் சுருட்டிக் கொண்டார். பணம் ஏற,ஏற மண்டிக்கு வரும் வியாபாரிகளிடம் கால்மேல் கால்போட்டு ஆணவமாக அவமரியாதையாகப் பேசுவதால், வரவர வியாபாரிகள் குறைந்து கொண்டே போனார்கள்.
இவரது அண்ணனுக்கு வேலைக்கு கொடுத்து இவரது குடும்பத்தைக் காப்பாற்றி, முதுகெலும்பாக இருந்து பல உதவிகள் செய்த Dr. சாதிக் என்பவரிடம் நான் ஒரு மணிநேரத்திற்கு பல ஆயிரம் சம்பாதிக்கிறேன், நீங்கள் டாக்டர் தொழிலில் என்ன சம்பாதிக்கப் போகிறீர்கள்? என்று பேசி, அவர் மனதில் ஆறாத வடு ஏற்படுத்தினார். ஊராருக்கு உபதேசம் செய்யும் இவர் தனது அண்ணன் சஹாபுத்தீனை டிரைவராக வைத்து மரியாதையின்றி நடத்தினார்.
இவர் பெரியமேட்டில் சொத்து வாங்கியதுகூட மாமனார் குடும்ப வாரிசுகளுக்கு துரோகம் செய்து தான். இவரது மாமனார் பல ஆண்டுகள் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். சென்னையில் பல ஆண்டுகள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அந்த வீட்டையே வீட்டுக்காரர்களிடமிருந்து நிர்ப்பந்தித்து வாங்கிக் கொள்வது சகஜம். அதேபோல், இவரது மாமனார் வீட்டை வீட்டுக்காரர்களிடமிருந்து சொற்ப விலைக்கு வாங்கினார். நியாயமாக, அந்தச் சொத்து இவரது மைத்துனர்களுக்குத் தான் சேர‌ உரிமையுள்ளது.. ஆனால், அவர்கள் வாயில்லாப் பூச்சிகளாக இருந்தால் அவர்களை ஏமாற்றி அல்வா கொடுத்தார். இன்று அந்த சொத்தும் இவரது கையை விட்டுப் போய் விட்டது. அநியாயமாக அடுத்தவன் வயிறெறிய வாங்கியது வந்த வழியே போவது சரிதானே?
இது இப்படியிருக்க, ஏழையாக இருந்தபோது, அடையாறில் நடந்த மாதகூட்டத்துக்கெல்லம் சென்று வந்தவர் பெரியமேட்டில் நடந்து வந்த ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மாத கூட்டத்தில் சரிவரக் கலந்துகொள்வதில்லை. ராத்திபுக்கும் சரியாக வருவதில்லை. சபை சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில்லை. அப்படியிருந்தும், சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் கருனை மனதோடு மன்னித்தே வந்தார்கள். இது இப்படியிருக்க, கேபிடல் பார்ட்னராகிய சிறிய தந்தையின் மகன் ஃபாரூக் என்பவருக்கு ரூ. 4 லட்சம் தர வேண்டியிருந்தது.. அவரோ நோயாளியாயிருந்தார். இவரை நம்பி எல்லா முதலையும் இழந்திருந்தார்.
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள், பாதிக்கப்பட்ட பார்ட்னருக்கு பணத்தைக் கொடுப்பது தானே நியாயம்? மொத்தமாகக் கொடுக்க முடியாவிட்டால் பத்தாயிரம், இருபதாயிரம் எனச் சிறிது சிறிதாகவாவது கொடுத்து விடுங்கள் என்று அறிவுரை கூறியதைப் பொறுக்க முடியாமல் , மரியாதையின்றி எழுந்து சென்றார். கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுக்க மனமில்லாதவர் வாப்பா நாயகம் அவர்களின் வீட்டுத் திருமணத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்ததாகச் சொல்வதை உலகம் ஏற்குமா? M.Y. நிஜாமுத்தீன் அவர்களுடன் சேர்ந்து பணம் கொடுத்ததாக கூறும் சஃபியுல்லா 1972ல் எந்த வருமானமும் இன்றி உறவினர்களின் ஆதரவில் படித்துக் கொண்டிருந்தார்.
ஒரு வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனத்துக்கு நல்ல பெயர் கேட்பது, அதன் வளர்ச்சிக்கு துஆச் செய்ய சொல்வது, மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுமென்றால் ஆலோசனை கேட்பது, வியாபாரத்தில் சிக்கல் வந்தால் அது நீங்க வேண்டுமென்று நிய்யத்து, நேர்ச்சை செய்வது இப்படியெல்லாம் கோரிக்கை வைது பலனைப் பெற்றவர் சேர வேண்டியவருக்கு பனத்தைத் திருப்பி கொடுக்கச் சொன்னால் மட்டும் அது கசந்தது. தனக்கு சாதகமென்றால் இனிக்கும், தனக்கு பாதகமென்றால் கசக்கும், இது தான் இவரின் இரண்டும் கெட்டான் நிலை.
உறவினர்களை வாப்பா நாயகம் அவர்கள் என்றும் பிரித்ததில்லை. அதற்குச் சாட்சி, இவரது தாயார்தான். இவரது தாயார் முரீதாக இருந்தும் இவரிடம் பேசவோ, போகவோ தடை விதித்ததாக இவரால் நிரூபிக்க முடியுமா? மச்சான், தங்கை உறவுகளும் அப்படித்தான். ஆனால், இவரது நடவடிக்கை பிடிக்காமல் போனதால் அவர்களாக இவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். கலீஃபா கரீம் அண்ணன் அவர்கள், இடையே சில காலம் சபையில் இருந்து பிரிந்திருந்தபோது அவர் தமது பெண்பிள்ளைகளை ‍ மகன்கள், ம‌ருமகன் யாரிடமும் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்படவில்லை. இன்னும் இதுபோன்று பல உதாரணங்கள் சொல்லலாம்.
மேலும், சபை சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாதவர்கள் சபையிலிருந்து நீக்கப்பட்டபோது, அவரவர் தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், சஃபியுல்லாவோ சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் பற்றி கண்ட கண்ட இடங்களில் கமெண்ட் அடித்துக் கேவலம் செய்தார். தங்களின் குருவை இழிவாகப் பேசியவரை முரீதுகளான அவரின் உறவினர்களே உதைத்து நொறுக்கியிருப்பார்கள். ஆனால், ஷைகு நாயகம் அவர்களிடம் கற்றுக் கொண்ட நல்லுபதேசத்தால் பொறுமையாக இருந்தார்கள். இப்படிப்பட்ட குருதுரோகியிடம் தொடர்பு வைத்தால், அந்த முஸீபத்து நம்மையும் பிடித்துக் கொள்ளுமே என்று உறவினர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். உறவினர்களில் பெரும்பாலானோர் முரீதுகளாக இருந்ததால், அவர்கள் உறவுகளைத் துண்டித்துக் கொண்டதால், யாருமற்ற அனாதையாக விடப்பட்டார். அந்த வருத்தம் தான் அவரை இந்த அளவிற்குப் புலம்ப வைத்திருக்கிறது. என்ன செய்வது? வினை விதைத்தவன், வினை அறுக்க வேண்டியது தானே?
ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முரீதுக‌ள் வாப்பா நாய‌கம் அவ‌ர்க‌ளுக்கு இருந்த‌போதும், த‌குந்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ச‌பையிலிருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை விர‌ல் விட்டு எண்ணி விட‌லாம். நீக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு சில‌ரைத் த‌விர‌ அத்த‌னை முரீதுக‌ளும் நேர்மையான‌வ‌ர்க‌ளாக‌, ந‌ல்ல‌டியார்க‌ளாக‌த் திக‌ழ்கிறார்க‌ள். வாப்பா நாய‌க‌ம் அவ‌ர்க‌ளின் துஆவால் ப‌ல‌ன் பெற்ற‌வ‌ர்கள் ஏராளம், ஏராள‌ம். தீராத‌ வியாதிக‌ள் தீர்க்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ஏழையாயிருந்து ச‌ஃபியுல்லாவை போல் ப‌ண‌க்கார‌னான‌வ‌ர்க‌ள், கும‌ர்க‌ளைக் க‌ரையேற்றிய‌வ‌ர்க‌ள், ஆயுள் நீடிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இப்ப‌டி அநேக‌ருண்டு. ச‌ஃபியுல்லா பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளென சில‌ரைப் ப‌ற்றிக் குறிப்பிடுகிறார்.. ஆனால், ப‌ல‌ன் பெற்ற‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை எடுத்தால், ப‌ல‌ மைல் நீள‌மாகும். அதுச‌ரி, இவ‌ர‌து மைத்துன‌ர் மோச‌மான‌ வியாதியால் பீடிக்க‌ப்ப‌ட்டு இற‌ந்தாரே?!(அல்லாஹ் அவ‌ருக்கு பிழை பொறுப்பானாக) அது இவ‌ருடைய‌ மைத்துன‌ர் என்ப‌தாலா? இன்னும் இது போன்ற‌ ப‌ட்டிய‌லை நாம் கூற‌ முடியும்.
வாப்பா நாயகம் அவர்களுடன் இருப்பதால், சோதிக்கப்பட்டார்கள் என்ற வாதம் சொத்தை வாதமாகும். ரசூல் (ஸல்) அவர்களைச் சார்ந்திருந்த சஹாபாக்கள் எத்தனை பேர் ஷஹீதானார்கள்? கை போன, கால் போன நபித் தோழர்கள் எத்தனை பேர்? ஏன் அவர்களின் ஆண் மகவு குழந்தையாக இருந்தபோதே வஃபாத் ஆனது. அவர்களின் மகளார் ஜைனப் (ரலி) அவர்களின் கரு எதிரிகளால் சிதைக்கப்பட்டது.. ஏன் கர்பலா களத்தில் அவர்களின் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீது ஆனார்கள். இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் விஷம் வைத்ததால் ஷஹீதானார்கள். இன்னும் இதுபோன்றவை நிறைய உள்ளன.
இன்னுமொரு முக்கியமான விஷயம்...
அஹ்லபைத்துகள் எனும் சையிதுமார்கள் சதகா ‍ ஜகாத் பொருள் அவர்களுக்கு ஆகாது. அல்லாஹ் குர்ஆனில் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றால், காணிக்கையுடன் செல்லுங்கள் என்ற கட்டளைப்படி அவர்களின் வாரிசுகளைச் சந்திக்கச் செல்லும்போது, வெறுங்கையோடு செல்லாமல், காணிக்கையுடன் செல்வது அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த நடைமுறை. இது இவர்களிடம் மட்டுமல்ல. புகழ்பெற்ற வலிமார்களின் வாழ்க்கையிலும் உண்டு. அஜ்மீர் நாயகம் (ரலி)அவர்களிடம் ஏராளமான செல்வம் வந்து குவியும். வலிமார்களைச் சந்திக்கச் செல்பவர்கள் அவர்களை வஸீலாவாக வைத்து அவர்களிடம் நேர்ச்சை வைத்து உலகில் யாரிடமும் பெற முடியாத தெய்வீக உதவிகளை அடைந்தபின் அந்த நேர்ச்சைப் பொருட்களை வலிமார்களிடம் ஒப்படைப்பது கண்கூடு. அவர்கள் தம் துஆவின் மூலம் கோடிகோடியாக‌ப் பெற்றவர்கள் சில ஆயிரங்களை வழங்கிவிட்டு, செய்ததைச் சொல்லிக் காட்டுவது நன்றி கொன்ற செயலல்லவா?
வாப்பா நாயகம் அவர்களின் ஏழ்மையைப் பற்றிப் பேசுகிறார். அப்போது இந்த ஆள் எப்படி இருந்தார் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏழ்மை எனது பெருமை என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, ஏழ்மையைக் கேவலம் பேசுகிறவன் யாரைப் பேசுகிறான் எனச் சிந்திக்க வேண்டும்! கலீஃபா A.P.S. அவர்களை நரகவாதி எனக் கூறியதாக உளறுகிறார். அப்படிக் கூறியிருந்தால், திருமுல்லைவாசலில் தங்கள் தந்தையாருக்கு அருகே அடக்கம் செய்ய சம்மதித்திருப்பார்களா?
க‌லீஃபா. க‌ரீம் அண்ண‌ன் அவ‌ர்க‌ள் பிரிந்திருந்த‌ போது, இவ‌ர் போல‌ ந‌ட‌க்க‌வில்லை. த‌னது குடும்ப‌த்தாரை வாப்பா நாய‌க‌ம் அவ‌ர்க‌ளின் தொட‌ர்பிலேயே இருக்க‌ச் செய்தார். யாருக்கும் இதுபோல‌ க‌டித‌ம் எழுத‌வில்லை. குருவின் மீது அன்பு கொண்டு அமைதியாக‌ இருந்து மீண்டும் அடைக்க‌ல‌மானார். அட்வ‌கேட். பீர் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் த‌ம‌து மாம‌னார் விஷ‌ய‌த்தில் வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌தில்லை. ச‌ஃபியுல்லா விஷ‌ய‌த்தில் வேண்டுமானால், இப்ப‌டி ஒரு ஆள் ந‌ஸீபு கெட்டுப் போய் விட்டாரே என‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டிருப்பார். வாப்பா நாய‌க‌ம் அவ‌ர்க‌ளால் திருத்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் - அநேக‌ர். த‌வ‌றுக‌ளைச் சுட்டிக்காட்டிய‌தற்காக‌ ஓடிப்போன‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர். ஒரு குரு த‌ன் இஷ்ட‌த்திற்கு ந‌ட‌க்க‌ வேண்டுமென‌ நினைப்ப‌வ‌ன் ந‌ல்ல‌ முரீது அல்ல‌. குருவின் எண்ண‌த்திற்கு இசைய‌ ந‌ட‌ப்ப‌வ‌னே உண்மை முரீது.
ச‌ஃபியுல்லா எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆள் என்ப‌த‌ற்கு அவ‌ர‌து இந்த‌க் க‌டித‌மே சாட்சி. இல்லாத‌தையும், பொல்லாததையும் இட்டுக் க‌ட்டிப் பேசும் ஒரு துரோகி மீது ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌து ச‌ரிதான் என்ப‌த‌ற்கு அவ‌ரும் அவ‌ர‌து க‌டித‌முமே சாட்சி.

- ஷேக், பேகம்பூர், திண்டுக்க‌ல்.

போலியான மனிதர்கள்

எம்சபை இது சத்தியத்தை சத்தியமாக சொல்லும் வளையகம்.இன்று பலர் ஞானசபைகளைப் பற்றி அவதூரான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹ+ அலைஹி வஸல்லாம் அவர்களின் குடும்பத்தினர்களை பழிசொல்வதும் போலி எனத்தூற்றுவதும் இவர்களின் அன்றாட வேலையாக இருந்துக் கொண்டு இருக்கிறது.
தூற்றக் கூடிய இவர்கள் போலி என இன்று கத்திக் கொண்டிருக்கும் இவர்கள் போலியாகவே தங்களின் 25 ஆண்டு வாழ்க்கையை கடந்து இருக்கிறார்கள்.
அவர்கள் இதுவரை வாழ்ந்தது போலி, இதற்கு முன் படித்ததும் போலி, அவர்கள் திருமணம் முடித்ததும் போலி, அவர்கள் குழந்தைகள் பெற்றதும் போலி, அவர்கள் வியாபாரம் செய்தததும் போலி, இப்படி தங்களின் வாழ்க்கையை போலியாகவே வாழ்ந்துக் கொண்டிருப்பதால் ஞானம் கற்ற தந்த ஆசானும் போலி என இன்று பைத்தியம் பிடித்த நிலையில் 24 மணிநேரமும் சதா இதைப்பற்றியே பேசி, பேசி எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களின் போலி முகத்திரைகளை உலகுக்கு எடுத்துக் காட்டவே இந்த பதிவு.