Sunday, December 20, 2009

ஷபியுல்லாவுக்குச் சாட்டையடி...

ஷபியுல்லாவின் பதில் கடிதம் கண்டேன். பரிதாபமாக இருந்தது. சங்கைமிகு வாப்பா நாயகம்
அவர்களை அல்லாஹ் எனக் கூற மறுத்ததால்தான் சபையிலிருந்து நீக்கப்பட்டதாகக்
கூறுகிறார். இது அப்பட்டமான பொய்ச் செய்தியாகும். சபையிலிருந்து அவர் ஏன் நீக்கப்பட்டார்
என்னும் உண்மைச் செய்தியை இதுவரை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வுண்மையை சபி பாய் வெளியிட விரும்பினால் நாங்கள் வெளியிடத் தயாராக உள்ளோம். ஆனால், மரணப் படுக்கையில் இருக்கும் சபிபாய் இதயம் வெடித்துவிடும் என்னும் கருணையினால் தான் அமைதி காத்து வருகிறேன்.

Ö மேலும், சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை நாங்கள் யாரும் அல்லாஹ்
எனக்கூறவில்லை. சபி பாய் தான் அவ்வாறு கூறி ஷிர்க்கில் இருக்கிறார் எனக் கருதுகிறோம்.

Ö சபையில் பல வருடங்கள் தான் இருந்ததாகக் கூறுகிறாரே, அந்தக் காலகட்டத்தில்
சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை அல்லாஹ் என்றுதான் கூறினாரா? எனத் தெளிவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

Ö திண்டுக்கல் ஜபருல்லா அண்ணனிடம் பேசமுடியவில்லை எனப் பொய்யாக
ஆதங்கப்படுகிறாரே, திண்டுக்கல் ஜபருல்லா அண்ணனுக்கு இவர் செய்த அநியாயம் - துரோகத்தை ஆதாரத்துடன் வெளியிட உள்ளோம். சபி பாய் அவற்றை எதிர்கொள்ளத் தயாரா?

Ö கலீபா. அட்வகேட். பீர் முஹம்மது அவர்கள், சபி பாயிடம் வருத்தப்பட்டதாகக் கூறுகிறார்.
அட்வகேட் அவர்களிடம் இதுவிஷயமாக உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்து விரைவில்
வெளியிடுவோம்.

Ö குரு என்பது யாரோ ஒருவரால் கொடுக்கப்படும் பட்டம் என இவர் கூறுவது சின்னப்பிள்ளைத் தனமாக அல்லவா உள்ளது? B.SC.படித்தவருக்கு அடிப்படை ‘ஞானம் “ கூட இல்லை என அறிந்து வெட்கப்படுகிறோம். என்ன வெட்கக்கேடு?

Ö சபி பாய் செய்த தீமைகள், அநீதிகள், அநியாயங்கள் ஆகியவற்றை எழுதத்தான் போகிறோம்.அவற்றை எதிர்கொள்ள சபி பாய் தன் உடம்பைச் சரி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

Ö சபி பாய் தன்னை ‘துரோகி” என்றும் ஈரோடு ஜமாலை “PLAY BOY” என்றும் ஒப்புக்
கொண்டதற்கு மிக்க நன்றி.

Ö ‘என்னைத் திருத்த வேண்டியதுதானே உங்க வாப்பா நாயகம்?” எனக் கேட்கிறார் சபி பாய்.
திருந்தவே மாட்டேன் என்பவனை - எப்படித் திருத்த முடியும்? கருவாடு மீனாக ஆசைப்படலாமா,சபி பாய்?

Ö குருவின் துஆவினால் செல்வத்தைப் பெற்றவர்கள், அன்னவர்களுக்காக சொத்துக்களை
மட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் தரீகாக்களில் ஜிஹாத் எனச் சொல்லப்படும். சபி பாய்க்கு இதுவும் தெரியாதா?

Ö நாங்கள் கூறுவதை ஃபித்னா என்று சபி பாய் கூறுகிறாரே, எங்களை வம்புக்கு இழுத்து
இல்லாததையும், பொல்லாததையும் எழுதத் தொடங்கியது அவர் தான் என்பதனை மறந்து விட்டீரா? அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவா?

Ö நாங்கள் வறுமையில் பெருமை காண்பவர்கள். ஆனால், சபி பாய் தம்மிடம் இருக்கும் அற்பப் பணத்தை வைத்துக் கொண்டு பெருமை பேசுகிறார். ஆணவத்தோடு பேசுகிறார். அவர் பணம் - அவர் ஆணவம் - அவரையே கொன்று விடும் என்பதை மறந்து விட்டாரா?
Ö கம்பம் - பூகம்பமானதா? என சபி பாய் கொக்கரிக்கின்றாரே? அவர் B.SC. படித்தவர் தானே?
தமிழ் அகராதி என ஒன்று உள்ளது. அதாவது அவருக்குத் தெரியுமா? இனிமேலாவது அதனை
எடுத்துப் பார்த்து கம்பம் என்றால் என்ன பொருள் என்று கூறுவாரா?

Ö நாங்கள் யாரையும் எதையும் இணை வைக்கவில்லை. சபி பாய் தான் இணையில்
சிக்கியுள்ளார். அதிலிருந்து அவர் வெளியேறட்டும்.
M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் தான் உனக்கு வியாபாரம் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை
ஷபியுல்லாவுக்குச் சாட்டையடி...ஒப்புக்கொள்ளும் சபி பாயே... நீ M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் பார்ட்டிகள் உன்னை அழைத்துச் சென்று மண்டி ஆரம்பித்ததாகச் சொல்வதிலிருந்தே, நீ M.Y. நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி கெட்டவனாக
ஆகி விட்டாய் என்பது தெள்ளத்தெளிவாகிறது. இப்படிப்பட்ட நீ எங்கள் ஷைகு நாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவன். உனது வாசகத்தைப் போய்; கலீபா. ஹபீபுல்லா அவர்களிடம் கேட்டதற்கு, அவர் M.Y. நிஜாமுத்தீன் அவர்களுடன் வியாபாரத்தில் சேர்ந்து இருந்ததாகவும்,உன்னைப்போல் நன்றிகெட்ட தனமாக ஓடிவிடவில்லையென்றும் சொன்னார்கள்.
A.P.S.சலாகுத்தீன் குடும்பம், DR. A.P. அப்துல் ஹக் குடும்ப விவாகரத்து விஷயமாக
ஒருதலைபட்சமாக நடந்ததாகக் குறிப்பிடுகிறாய். கலீபா. ஹபீபுல்லா அவர்களும், காஜா நஜ்முத்தீன் ஆகிய இருவரும் A.P.S.சலாகுத்தீன் வீட்டிற்குச் சென்று விஷயங்களைச் சொல்லியவுடன் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் (A.P.S. சலாகுத்தீன், அவர் மனைவி, அவர் மகன் அணீஸ், சலாகுத்தீன் மைத்துனர் V.A.B.M. மாலிக்) ஆகியோர் அனைவரின் ஒப்புதல் பெற்று, அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் Advocate மூலமாக விவாகரத்து நடந்ததை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்.
சங்கைமிகு ஹாமித் மௌலானா அவர்களுக்கு பெண் பிள்ளைகள் கிடையாது. அவ்வாறிருக்க,
சங்கைமிகு ஹாமித் மௌலானா மகளார் கல்யாணத்துக்குப் பணம் கொடுத்ததாக நீ
சொல்லியதிலிருந்து நீ ஒரு பெரும் பொய்யன். எதை வேண்டுமானாலும் உன் இஷ்டத்திற்கு பேசக் கூடியவன் என்று தெரிகிறது. எனவே, நீ சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்,அனைத்துமே பொய்யானவைதாம் என்று இதனை வாசிக்கும் அனைவரும் அறிவர்.
மேலும், எங்கள் குருவைப் பற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க,
கொடுமையான முறையில் நீ உருவகப்படுத்தி எழுதியதைப் பார்க்க, உன் புத்தி எவ்வளவு மோசமானது என்று தெள்ளத் தெளிவாக பிரதிபலிப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
எங்கள் குருநாதர் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களே நல்லவர்கள், நாங்கள் அறிவோம். குருவை அளப்பதற்கு யாருக்கும், குறிப்பாக உனக்கு எந்தத் தகுதியும், அருகதையும் இல்லை என்பதைப் புரிந்துகொள்.

கடைசியாக ஒரு வார்த்தை:
இஸ்லாமிய விரோத காரியங்களில் ஈடுபட்டதால், ஷரீஅத்தின் நியதிப்படி, எங்கள் தரீக்காவிலிருந்து நீக்கப்பட்ட சபி பாய்க்கு, எங்கள் தரீக்காவைப் பற்றியோ, எங்கள் குரு சம்பந்தமாகவோ எழுதவோ,பேசவோ, விமர்சிக்கவோ எந்த உரிமையும், தகுதியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலும், எழுதினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். மேலும்,
எங்கள் குருவை உயிரினும் மேலாக எண்ணக்கூடிய - உயிரையும் கொடுக்கக்கூடிய ஆயிரமாயிரம் உண்மையான பக்தர்களும் உன்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எங்களால் தடுக்க முடியாது.

இப்படிக்கு,
உன் அருகில் இருந்து ‘செயல்படும்”
- A.ஷேக் முஹம்மது.

1 comment:

Anonymous said...

IF ANY BODY WANT TO SEE SAITHAN. PLS MEET SAFIULLAH