Sunday, December 20, 2009

ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்பொழுது.......

டாக்டர். அஷ்ரஃப் அலி ஹக்கிய்யுல் காதிரி
MD DM (Cardiology)
முஹம்மது ஸ‌கரிய்யா ஹக்கிய்யுல் காதிரி
Marine Electronic Engineer


வலீமார்களும், குத்புமார்களும் ஹக்கால் ஹக்குடைய கித்மத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள்.
அவர்களுடைய ஆன்மீக ஆட்சி மறைவுலகத்தைச் சேர்ந்தது. அவர்களை மனிதர்களால் அறியவும் முடியாது. உருவமற்ற இறைவனுக்குக் காலும், கையும், ஏழு வானங்களுக்கு அப்பால் அவன் அமர சிம்மாசனம் என்ற கட்டுமானமும் (அதில் அல்லாஹ் அமரும்பொழுது அல்லாஹ்வுடைய பாரத்தால் குதிரைமீது இடப்பட்ட புதிய சேணம், அதன்மீது குதிரை வீரன் அமரும்பொழுது கிறீச்சிடுவதுபோல் அர்ஷ் கிறீச்சிடுமாம். நஊது பில்லாஹ்) கற்பிக்கும் தைமிய்யாக்களின் கற்பனைக்கு வலீமார்களும் குத்புமார்களும் அப்பாற்பட்டவர்கள்.

ஆன்மீக அரசர்களின் வாழ்க்கையும், நடையுடைகளும், சொல்லும், செயலும், நடவடிக்கைகளும் இந்த தைமிய்யாக்க‌ளின் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பகற் கன‌வுகளுக்கு அப்பாற்பட்டது. தங்களைப்போல் வலீமார்களும் குத்புமார்களும் உடையணிவதாலும், உணவருந்துவதாலும், மனித உருவத்தில் இருப்பதாலும் இவ்வறிவிலிகளால், இவர்களும் நம்மைப்போல் மலத்தை வயிற்றில் சுமந்த மனிதர்கள் என்பதற்குமேல் எண்ணமுடியாது.

இவ்வாறாக ஹக்கு வலீமார்களையும் குத்புமார்களையும் மனிதர்களிடமிருந்து திரையிட்டு மறைத்துள்ளது. ஆனால், அல்லாஹ்வின் ஆதி கற்பனையில் எவரெவ‌ர்களுடைய விதியில் அபூர்வமாகப் புதையல் கிடைத்ததுபோல மகத்தான நன்மையை அல்லாஹ் நாடிவிட்டானோ அவர்களுக்கு, தங்கள் காலத்துக்குரிய நாயகர்களை அறிந்துகொள்ளும் பெரும்பாக்கியத்தை நல்குகிறான். அல்லாஹு அக்பர்.

அப்படிப்பட்ட பாக்கியத்திற்கு உரியவர்தான் மறைந்த எங்களது தகப்பனார் கலீபா, அல்ஹாஜ், அப்துல் கரீம் (ஜமாலி) அவர்கள். எங்களது தகப்பனார், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் குத்பியத்தை உணர்ந்த முதல் மனிதர். இது அவர்களுடைய திறமையினால் அல்ல. இது ஹக்கு அவர்களுக்குக் கொடுத்த பெரும்பாக்கியம்.

எங்களது குடும்பத்தின் சுய நலன் கருதியே எங்க‌ளது தகப்பனார், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களை வருடாவருடம் இந்தியா வந்து எங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த உருக்கமான கடிதத்தை கலீபாவின் மூத்த மகனாகிய, அஷ்ரப் அலியாகிய நான்தான் என் கைப்பட எழுதியவன். இக்கோரிக்கை வாப்பா நாயகம் அவர்களுக்கு மிகமிகக் கடினமாகவே இருந்தது. எனினும், எங்கள் தகப்பனாரின் விடாப்பிடியால்தான் வாப்பா நாயகம் அவர்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். அவ்வாறு ஒப்புக்கொண்டாலும் இந்திய விஜயத்தை நிறைவேற்றுவது ஆரம்பத்தில் வாப்பா நாயகம் அவர்களுக்கு மிகவும் கடினமாகவேயிருந்தது.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் அனைத்துப் பட்டோலைகளும் எங்களது தகப்பனாரால் பாதுகாக்கப்பட்டு பொக்கிஷம்போல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவைகள்தான் எங்கள் சொல்லுக்கு ஆதாரங்கள். வாப்பா நாயகம் அவர்களின் அகமியத்தை முதலில் எங்கள் நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய ஆன்மீக நண்பர்கள் இவர்களுக்கு மட்டும்தான் எங்கள் தகப்பனார் வெளியாக்கியிருந்தனர். பின்னர் அனேகர் வந்தனர். அவர்களில் ஆன்மீக தாகிகளும் இருந்தனர். அப்துல் கரீம் ஓதியவர், படித்தவர், இறை நேசர்களை அறிந்தவர் அவர் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று ஈமான் கொண்டவர்களும் இருந்தனர்.

ஆன்மீக வழியே இன்னதென அறியாது இருந்துவிட்டு இறைவனின் கிருபாகடாட்சம் கொண்டு கற்பூரத்தில் நெருப்புப் பற்றிக் கொள்வதுபோல ஈமான் பெற்றவர்களும் இருந்தனர். வரிக்கு வரி புத்தகங்களை வாசித்து ஆராய்ச்சி செய்து ஒரு வழியாக ஒப்புக்கொண்டு வந்தவர்களும் இருந்தனர். வலீமார்கள் குத்புமார்களென்றால் என்னவோ ஏதோவென்று நினைத்துக்கொண்டு வந்து ஏமாந்து போனவர்களுமுண்டு.

மந்திரத்தால் மாங்காய் விழுமென்று மெஸ்மெரிச வித்தைகளை எதிர்பார்த்து வந்து ஏமாந்தவர்களும் உண்டு. நிமிஷத்திற்கு ஒரு அற்புதம் நடக்குமென்று நினைத்து வந்து ஏமாந்தவர்களும் உண்டு. பீடி மஸ்தான், முட்டை மஸ்தான் மஜ்தூபுகள் போன்று கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று வந்து ஏமாந்தவர்களும் உண்டு. கறுப்பு உடையணிந்து சடை வளர்த்து கண்களை உருட்டுவதையும் விளங்காத பாஷையில் சம்பாஷணை செய்வதையும் காண வந்து ஏமாந்தவர்களும் உண்டு. முழ நீள தலையணியும் கணுக்கால்வரை அங்கியும் வாய் ஓயாத ஸ்தோத்திரங்களையும் பார்க்க வந்தவர்களும் உண்டு. வாய் பேசாது மணிக்கணக்காக கண்மூடிய தியான நிலையை நினத்து வந்தவர்களும் உண்டு. இம்மென்றால் இருநூறும் அம்மென்றால் ஆயிரமுமாக குர்ஆன் ஆயத்துகளும் ஹதீஸ்களும் சண்டமாருதமாக அள்ளி வீசப்படுவதை எதிர்பார்த்து வந்தவர்களும் உண்டு.

குதர்க்க நோக்கோடும், காழ்ப்புணர்வோடும், விஷம புத்தியோடும்,பொறாமைக் கண்கொண்டு நோக்கி, உண்மைக்கு மாறாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் எண்ணத்தோடு வந்த குழப்பவாதிகளும் உண்டு. நன்னம்பிக்கையும், நாணயமும், சித்த சுத்தியும், உள்ளன்பும், உவப்பும், நெருக்கமும் கொண்ட முரீதுகளும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது இகபர பொறுப்புக்களை தங்களது முர்ஷிதிடம் ஒப்படைத்தவர்கள். இம்முரீதுகளின் நலன் நாடி இம்முரீதுகளின் உள்ளங்களை சுத்தம் செய்வது முர்ஷிதின் கடமையாகிறது.

அறுவை சிகிச்சைக்கு அனுமதி கொடுத்துவிட்டு மருத்துவரின் கத்தியை வெறுத்தால் நோய் தீருமா? புடம் போடாமல்தான் தங்க‌த்திலுள்ள அழுக்கை நீக்க முடியுமா? கசப்பு மருந்து கொடுக்கப்படும்பொழுது முரீதுகள் மூன்று வகையாகப் பிரிவர். முதல் வகையினர் தங்க‌ளது ஆன்மீக நன்மை கருதி சிகிச்சையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வர். இரண்டாவது பிரிவினர் வாய் பேசாது விலகிவிடுவர். மூன்றாவது வகையைச் சேர்ந்த அபாக்கியவான்களோ தங்க‌ளது முர்ஷிதுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவிடுவர். இம்மையிலும் மறுமையிலும் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்கள் யார்? பாவமென்னும் நரகலை எப்பொழுதும் தனது ஆன்மாவில் பூசிக்கொண்டிருப்பவன் சுத்தத்தையறியான். குர்பத்தென்னும் சுத்த நீரால் குளித்துவிட்டு மறுபடியும் நரகலை தம் ஆன்மாவில் பூசிக்கொள்ளுபவர்களைவிடப் பேறு கெட்டவர்கள் யார்?

எங்கள் தகப்பனாருடைய உயிர் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் திவ்ய சலாத்திற்கு பதில் சலாம் சொல்லிக்கொண்டே பிரிந்தது. இடையில் வாப்பா நாயகத்திற்கும் எங்கள் தகப்பனாருக்கும் உள்ள விஷயங்களில் தலையிடும் உரிமை, பெற்ற பிள்ளைகளாகிய எங்களுக்கே இருந்ததில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் ஞான பாட்டையில் அடியெடுத்து வைக்காத அபக்குவிகளுக்குப் புரியாது. எந்தக் கட்டத்திலும், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களைக் கொண்டு அனுதினமும் வசீலா தேடும் நியமத்தை ஒரு பொழுதும் எங்கள் தகப்பனார் கைவிட்டதில்லை. இவையெல்லாம் ஒரு முர்ஷிதிடம் ஒரு முரீது எந்த நிலைமையிலும் எவ்வாறு மனம் பிறழாது நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரண‌ங்கள்.

வலீமார்களையும் குத்புமார்களையும் அல்லாஹ்தான் தனது ரஹ்மத்துடைய மடியில் வளர்க்கிறான். ஞான உணவு அளிக்கிறான். மனிதர்கள் வளர்த்துவிடுவதற்கு ஞான மகான்கள் அரசியல்வாதிகளல்லர். இறைவனின் சொந்தக் கொடைகளுக்குமுன் இவ்வுலக ஐஸ்வரியங்கள் நஜீஸைவிடக் கேவலம். ஆனாலும், தங்களை அண்டியவர்கள்மீது உள்ள இரக்கம் காரண‌மாகவே ஞான மகான்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கின்றனர். இவையெல்லாம் அறியாதவர்களுக்குப் புரியாது.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின்மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் கைகூசாமலும், நாகூசாமலும் எழுதுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது இதுதான். இவ்வுலகம் வெறும் இரண்டு நாள். இவ்விரண்டு நாட்களையும் உங்கள் ஆன்மாக்களை அபாயத்தில் ஆக்கிக்கொள்வதில் நீங்கள் ஆனந்தம் கொள்பவர்களாக இருந்தால் நாங்கள் உங்க‌ளைத் தடுக்கப்போவதில்லை. இறைவனை அஞ்சுபவர்களுக்கு ஹதீஸ் குத்ஸியில் இறைவன் செய்துள்ள கீழ்க்கண்ட பிரகடனம் போதும்:

إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب

(நிச்சயமாக அல்லாஹ் சொல்கிறான்: என்னுடைய நேசர்களைப் பகைத்தவர்கள்மீது நிச்சயமாக நான் யுத்தப் பிரகடன‌ம் செய்துவிட்டேன்).
சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் மறைந்த உயிர்ப் பிள்ளை M.Y. நிஜாமுத்தீன் அண்ணன் அவர்கள் கூறுவார்கள்:
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்பொழுது எச்சில் இலை என்னவாகும்?"
ஈமான் ஆட்டங்காணும்பொழுது இதுதான் நடக்கும்.
ஏக இறைவன் நம்மனைவர்களையும் ஈமான் ஆட்டங்காணும் துர்ப்பாக்கியத்திலிருந்து காப்பாற்றுவானாக. ஆமீன்.

7 comments:

Anonymous said...

1. //வலீமார்களும், குத்புமார்களும் ஹக்கால் ஹக்குடைய கித்மத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள்.
அவர்களுடைய ஆன்மீக ஆட்சி மறைவுலகத்தைச் சேர்ந்தது. அவர்களை மனிதர்களால் அறியவும் முடியாது.// appadeena ungalukku eppadi therinthathu ?.

2.//இவ்வாறாக ஹக்கு வலீமார்களையும் குத்புமார்களையும் மனிதர்களிடமிருந்து திரையிட்டு மறைத்துள்ளது. ஆனால், அல்லாஹ்வின் ஆதி கற்பனையில் எவரெவ‌ர்களுடைய விதியில் அபூர்வமாகப் புதையல் கிடைத்ததுபோல மகத்தான நன்மையை அல்லாஹ் நாடிவிட்டானோ அவர்களுக்கு, தங்கள் காலத்துக்குரிய நாயகர்களை அறிந்துகொள்ளும் பெரும்பாக்கியத்தை நல்குகிறான்.// Appadeennu ALLAH solli erukkaana ?. Arivu ketta DOCTOR thirunthuppa, thirunthu. Unga thagappanara SHAITHAANNU solla sonnathu maranthu poocha ?.

Anonymous said...

ada madayare imaan illaina neengu musulime
illa appadeenna neeyi oru kafiru ippadiyelam comment adikkira neeyi enga antha doctor enga
neeyi oru opposite party adilyum vadi kattapattathumna muttal

Anonymous said...

அட மடையனே! டாக்டரே தன் தந்தையைப்பற்றி தெளிவா சொல்லிருக்காரு...நீ இஞ்சினியர் போடும் காசுக்கு வாலாட்டுறவன். நீ கண்ணியமிக்க அப்துல்கரீம்(ஜமாலி) அவர்களைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவன்.

Anonymous said...

//அல்லாஹ்வின் ஆதி கற்பனையில் எவரெவ‌ர்களுடைய விதியில் அபூர்வமாகப் புதையல் கிடைத்ததுபோல மகத்தான நன்மையை அல்லாஹ் நாடிவிட்டானோ அவர்களுக்கு, தங்கள் காலத்துக்குரிய நாயகர்களை அறிந்துகொள்ளும் பெரும்பாக்கியத்தை நல்குகிறான்.// Allah naadunathu Mathippirkuriya KAREEM ANNANUKKU therinjatha ?. Avangalukku appothu therinjathu AWN Mowlana Yaasin Mowlanavin magan enbathu mattumthan. Unga athavum, neeyum IQBAL veedu sendru kaasu kettu vaazthathu ulagam ariyum madaya. Nandri marappathu naayienum keeezada.

VSM Hasan said...

HAHAHA adai Kottar and Therizhandhur... neenga Iqbal podra kaasukku evvalvu visuvaasama nandriyodu irukkeengannu ooru arinja vishayam thaan. Mada payalungala..

Ashik said...

vappa nayagham is the greatest awliya.
Pls hold his hands to attain jannah.

Awn Adimai said...

டாக்டர் அஷ்ரஃப் அலி அவர்கள நான் பார்த்தது கிடையாது.கேள்வி பட்டு உள்ளேன்.குறிப்பாக தலைவராக இருந்த போது இன்சினீயர் உம்ரா நிகழ்வுக்கு பிறகு அவர்களை பற்றி கூறியுள்ளார்.
டாக்டர் அஷ்ரஃப் அலி அவர்களுக்கு,
உங்கள் கடிதம் பலமுறை படித்தேன்.அவ்லியாக்களை பற்றி எழுதுதனது மிக்க சரி.சங்கைமிகு ஆருயிர் வாப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி பற்றி என்க்கு போதிக்கப்பட்டது,அவர்களின் அணுவினும்,அணுவான அதனினுன் நுண்ணீய.............மைக்கோரா மைக்கோரா...அளவு கூட அறிந்திட முடியும் என்று நினைச்சா கூட மகா மூடன் என்று தலைவராக இருந்த என்சீனியர் ஆயிரம் முறை கூறி மனசில் ஏற்றி விட்ட பிறகு,தாங்கள் ,தங்களுடைய தகப்பனார் அவர்கள்,நம் ஆருயர் சற்குருவை எப்படி அறிந்து கொள்ள முடியும்.அப்படி கண்டுபிடித்தால் தங்கள் தகப்பனாரை தாங்கள் தெரியாமலேயே,அவசரத்தில் அந்தஸ்த்தில் உயர்த்தி விட்டீர்கள்.அல்லாஹ்வும்,ரசூலும்,சைகுனாவும் மன்னிக்கட்டும்.
அடியேன் தவறுடன் எழுதி இருந்தால் மன்னியுங்கள்.

ஆசிக்கே அவுன்