Showing posts with label காயல் ரசிகன் – பாகம் 2. Show all posts
Showing posts with label காயல் ரசிகன் – பாகம் 2. Show all posts

Sunday, January 10, 2010

காயல் ரசிகன் – பாகம் 2

காயல்பட்டினம் அபூபக்கர் அவர்களுக்கு,

தாங்கள் சமீபத்தில் ஒருவரை டெர்மினேட் செய்து வெளியேற்றினீர்… ஆனால் அவர் சார்ந்திருந்த துறையின் மேலாளர், “தங்கள் மீது பணி சம்பந்தமாக எந்த குற்றங் குறையும் இல்லை… மேலிடத்து உத்தரவு… அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்… பின்பு அதன் காரணம்தான் என்ன?

சரி… பணி நேரத்தில் மார்க்க சம்பந்தமான நிகழ்வுகளுக்கு செல்வது தவறு எனக் கூறி வந்த தாங்கள், ஊழியர்களை, ஓவர் டைம் கொடுத்து, தங்கள் வீட்டின் சொந்த வேலைகளுக்கும் மற்றைய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வது தான் தங்களின் நீதியான நிர்வாகமா?

தங்களுக்கு “ஜெனரல் முஆவியா” (GM) எனப் பெயர் வைத்த “அப்துல் ரஹீம்” என்பவரை இன்றளவும் வேலையில் வைத்திருப்பதன் அர்த்தமென்ன? பயத்தினாலா? உண்மையைக் கூறியுள்ளார் என்பதாலா?

“இமாம் கலீல் அவ்ன் மவ்லானா அவர்களின் உரைகளையும் பாடல்களையும் பல முறை கேட்ட பிறகுதான் பல ஞான விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்” எனப் பல முறை மேடைகளில் உரக்கக் கூறிய தங்களுக்கு, தற்போது போலி ஞானம் பிறந்தது எவ்வாறு?

தங்களைப் பற்றி, இமாம் கலீல் அவ்ன் மவ்லானா அவர்களிடம் புகார் கூற ஊக்கமளித்த “அண்ணன்” அவர்களையும் புகார் கூறிய “நாரே தக்பீர்” அவர்களையும் தாங்கள் எதிர்க்காததன் அர்த்தம் என்ன? பயமா? அல்லது பலவீனமா?

“தப்ரூக் உணவு தயாராகி விட்டதா?” என வினவிவிட்டு, தயாராகி விட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் மஜ்லிஸிற்கு வந்து புனித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீரே… இதுதான் தாங்கள் மார்க்கத்தின் மீது வைத்திருக்கும் அதீத பாசமா?

தங்களைப் பற்றி புகார் கூறப்பட்ட செய்தி, தங்களின் சகோதரர் இம்தியாஸுக்கும் தெரிந்தே அரங்கேற்றப்பட்டது… இருந்தும் தாங்கள் அவருடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றீரே…? இதற்குப் பெயர் பயமா? பலவீனமா?

தங்களின் சகோதரர் (இயக்குனர்) அவர்களைப் பற்றி, சகோதரர் இம்தியாஸ் அவர்கள், திண்டுக்கலைச் சேர்ந்த ஆலிம் ஒருவரிடம், மிகத் தரக்குறைவாக கமெண்ட் அடித்திருக்கின்றாரே…? இதனைப் பற்றி தங்களின் கருத்தென்ன?

பழனி பாபாவையும் ஷியா கொள்கைகளையும் மிக மிக ஆதரித்துப் பேசும் தாங்கள், அதனை பகிரங்கப்படுத்தாமல், மறைமுகமாகவே வைத்திருப்பதன் மர்மமென்ன?

எதிலும் நேர்மையாகவே நடப்பதாகக் கூறும் தாங்கள், தங்களைப் போன்ற நீதிவான்கள் உலகத்திலேயே இல்லை எனக் கருதும் தாங்கள், சபையில் என்னென்ன நடக்கின்றது என்பதனையும், யார் யார் என்னென்ன பேசுகின்றார்கள் என்பதனையும் வேவு பார்ப்பதற்காக, ஆள் நியமித்திருக்கின்றீர்களே… தங்களுக்குப் பெயர் என்ன? அப்படித் தங்களிடம் கூறும் நபருக்கு என்ன பெயர் என்பதனையும் குறிப்பிடவும்…


தாங்கள், வஹ்ஹாபியக் கொள்கையுடையோரை அலுவலகத்திலும் வீட்டிலும் வைத்துப் பாதுகாத்து வருகின்றீர்… தங்களின் சகோதரர், கொடிய வஹ்ஹாபிகளின் இணையதளத்தில் எழுதி வருகின்றார்… ஆனால், தாங்கள் இருவரும் “நாங்கள் தான் தூய சுன்னத் வல் ஜமாஅத்” எனக் கூறிக் கொள்கின்றீர்… உண்மையை பகிரங்கப்படுத்துங்கள்…